தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது என தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தா...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்புகளும் கிடையாது என தாலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் நேற்று (15) கைப்பற்றியமை குறித்து, அதன் பேச்சாளர் சுஹைல் ஷயிம், இலங்கையை தளமாகக் கொண்டு இயங்கும் டெய்லி மீரர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான் ஒரு சுதந்திர போராட்ட அமைப்பு என அவர் கூறியுள்ளார்.
தமக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் விடுதலை மற்றும் வெளிநாட்டு ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு எதிராகவே, தாம் கடந்த 20 வருட காலமாக போராட்டங்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.