திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் ஒக்டோபர் முதலாம...
திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் அசேல குணவர்த்த வெளியிடுவார் என குறிப்பிடப்பட்டது.
குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்கும் விழாக்களை வீடுகளிலேயே நடத்துவற்கு அனுமதிக்க சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் இறுதிச் சடங்குகள் மற்றும் பல பொதுக் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாட்டை மீண்டும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இரவில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.