யாழில் 280 பேருக்கு கொரோனாத் தொற்று.. மொத்த தொற்று 14ஆயிரத்தை கடந்தது.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு யாழ்மவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்...
யாழில் 280 பேருக்கு கொரோனாத் தொற்று.. மொத்த தொற்று 14ஆயிரத்தை கடந்தது.. அரச அதிபர் மகேசன் தெரிவிப்பு
யாழ்மவட்டத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 280 கொரோனாத் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்
யாழ் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 74 தொற்றாளர்களும் அன்டியன் பரிசோதனையில் 206 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாவட்டத்தின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 14ஆயிரத்து 244 ஆக உயர்வடைந்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் நேற்று மாலை வரை 289 ஆக உயர்வடைந்துள்ளது.
மக்கள் தொடர்ந்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு ஊரடங்கு வேளையில் உள்ளூர் பிரதேசங்களில் அதிக நடமாட்டம் இருப்வது அவதானிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து வீடுகளில் தங்கியிருப்பதோடு தடுப்பூசிகளையும் தவறாமல் பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆகவே பொதுமக்கள் வழங்கும் ஒத்துழைப்பின் மூலம் யாழ் மாவட்டத்தின் நிலைமைகளை விரைவில் சரி செய்ய உதவுவும் என அவர் மேலும் தெரிவித்தார்.