லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர், ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் ,திவயின பத்திரிகையின் ஆசிரியர் உட்பட்டோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்...
லங்காதீப பத்திரிகையின் ஆசிரியர், ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் ,திவயின பத்திரிகையின் ஆசிரியர் உட்பட்டோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைக்காக அழைப்பு விடுத்துள்ள நிலையில், குறித்த ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் அறிவித்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சமீபத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து துஷான் குணவர்தன விலகியிருந்த நிலையில், சதொச நிறுவனத்தில் பல்வேறு மோசடி சம்பவங்கள் இருந்ததாக அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்த்து வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பில் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், கடந்த நாட்களில் சதொச நிறுவனத்தில் ஏற்பட்ட மோசடி சம்பவங்களை மேற்கோள் காட்டி லங்காதீப மற்றும் திவயின பத்திரிகைகள் பல்வேறு செய்திகளை பதிவிட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.