நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று முற்பகல் கூடிய கொவிட்−19 தடுப்புக்கான செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.