கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதம் 21ஆம் திகதிக்குப் பிறகு ஏராளமான உள்ள...
கொரோனா வைரஸ் அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில், இந்த மாதம் 21ஆம் திகதிக்குப் பிறகு ஏராளமான உள்ளூர் சுற்றுலா பயணிகள் நுவரெலியாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதாக நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் மேயரும் நுவரெலியா சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மஹிந்த தொடம்பேகமகே கூறினார்.
ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கம் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
நவம்பர் மாதம் நாட்டிற்கு வரும் இந்திய மற்றும் சீன சுற்றுலா பயணிகளுக்காக நுவரெலியாவில் ஏற்கனவே பல ஹோட்டல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தருவார்கள்.
இவ்வாறு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவிற்கு வருகை தர உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த தொடம்பேகமகே குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் அறிவுறுத்தல்களின்படி நுவரெலியாவிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் மகிந்த தொடம்பேகமகே மேலும் தெரிவித்தார்.