நீர்வேலி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் மாலை கைது செய்தனர். சம்...
நீர்வேலி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் மாலை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நீர்வேலிப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வீடு புகுந்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
இந்நிலையில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் மூன்று சந்தேக நபர்களையும் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாக சந்தேகிக்கப்படும் ஒரு முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர்.