வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரை , கெரோயின் விற்பனை செய்யும் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் உட்பட நால்வரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் ...
வடமாகாணம் முழுவதும் போதை மாத்திரை , கெரோயின் விற்பனை செய்யும் முக்கிய சந்தேகநபர்கள் இருவர் உட்பட நால்வரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்புபிரிவினரால் கைது செய்யபபட்டுள்ளனர்.
விலையுயர்ந்த காரில் சென்று வடமாகாணங்களில் பல இடஙகளில் பாமசிஇ பாடசாலைகள் உட்பட இளைஞரகள் மற்றும் சிறுவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் பிரதான சந்கேநபர்கள் இருவர் உட்பட நால்வரை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேனன் தலைமையலான குழுவினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரகளிடம் இருந்து 52 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1562 போதை மாத்திரைகளும்இ 2.5 கிராம் கெரோயின்இ 200 கிராம் கஞ்சாஇ ஒரு கூரிய வாள் உட்பட போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இரு கார்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன. யாழில் காரில் வைத்து போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குறித்த பொலிஸ் குழுவினரிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் இராவின் தோட்டம் வீதியில் வைத்து குறித்த கார் சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டதில் 2.5 கிராம் கெரோயின்இ 200 கிராம் கஞ்சாஇ 2 பெட்டி போதைமாத்திரைகள் என்பன மீட்கப்பட்டதுடன் முக்கிய சந்தேகநபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவரில் பிரதான சந்தேகநபர் யாழ் நகரப்பகுதியை சேர்ந்த 30 வயதுடைய யாஸ் குழு எனும் புதிய வாள்வெட்டு குழுவின் தலைவராவார் அவரிடம் இருந்து கூரிய வாள் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. இதேவேளை அவரிடம் நடாத்திய விசாரணையில் தனக்கு போதை மாத்திரைகளை வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவரே தருவதாகவும் குஙித்த நபர் வடமாகாணம் முழுவதும் போதைமாத்திரைகளை விற்பனை செய்யும் பிரதான தரகர் எனவும் குறித்த நபர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் சந்தேகநபர் தெரிவித்ததையடுத்து குறித்த நபரை யாழ கோவில் வீதியில் வைத்து மேனன் தலைமையிலான குழுவினர் சுற்றி வளைத்தனர்.
இதன்போது அவர் பயணித்த காரில் 50 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1550 போதை மாத்திரைகள் , கார் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டன. குறித்த மாத்திரைகளை யாழில் விநியோகிப்பதற்காய் குறித்த நபர் யாழிற்கு வருகை தநதமை விசாரணைகளில் தெரயவந்தது. கைது செய்யப்பட்டவர் வவுனியா நெடுங்குளம் பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். உயிர் ஆபத்தை தரக்கூடிய குறித்த மாத்திரைகள் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேறகொண்டுவருவதோடு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.