வடக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் அனர்த்த பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை தமக்கு தெரியப்படுத்துமாற...
வடக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் அனர்த்த பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை தமக்கு தெரியப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உத்தியோகத்தர்கள் தயாராக இருக்கவேண்டும் .
அதற்கான தயார்படுத்தல்கள் மற்றும் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் அடையாளப்படுத்தப் பட வேண்டிய பிரதேசங்கள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை தமக்கு அனுப்புமாறு வடமாகாண ஆளுநர் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.