2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 93 மேலதிகமாக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைய...
2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று 93 மேலதிகமாக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஸில் ராஜபக்ஸ.
இது தொடர்பில் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட அவர்,
“இந்த சவாலான சூழலுக்கு மத்தியிலும், இலங்கைப் பொருளாதாரம் விரைவான மற்றும் ஆரோக்கியமான மீட்சியைக் காணும் என்று நான் நம்புகிறேன். இந்த முயற்சியில் அனைத்து பங்குதாரர்களும் எங்களுடன் வலுவாக நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். 2022 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என்றார்.