கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளதா...
கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு, பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கும் சட்டத்தை கொண்டு வர சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விரைவில் இந்த சட்டத்தை கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகின்றார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.