6 மாத கால கடனுக்கு சிங்கப்பூரிடமிருந்து மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ஜனவரி மாதம...
6 மாத கால கடனுக்கு சிங்கப்பூரிடமிருந்து மசகு எண்ணெயை பெற்றுக்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஜனவரி மாதம் 23ம் திகதி முதலாவது மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், மசகு எண்ணெய் தட்டுபாட்டை அடுத்து, எரிபொருள் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் இடைநிறுத்தவுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
World Express Services
இதன்படி, குறித்த மசகு எண்ணெய் கப்பல் நாட்டை வந்தடைந்த பின்னர், எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.