யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள இலங்கை மின்சாரசபையின் அலுவலக வளாகத்திலிருந்து தொடர்ச்சியாக இரும்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்...
யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள இலங்கை மின்சாரசபையின் அலுவலக வளாகத்திலிருந்து தொடர்ச்சியாக இரும்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு காவல் கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த மின்சாரசபை வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்துள்ளது.