யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியல் நேற்றைய தினம் சிவில் உடை தரித்த பாதுகாப்புத் தரப்பினரால் மீனவன் மீது சரமாரியான தாக்குதல்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியல் நேற்றைய தினம் சிவில் உடை தரித்த பாதுகாப்புத் தரப்பினரால் மீனவன் மீது சரமாரியான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த நபர் கடலிற்க்கு சென்றவேளை கடலில் இந்தியன் இழுவை படகுகளால் 17. வலைகளை இழந்த நிலையில் அவற்றை தேடியும் கிடைக்காத நிலையில் சில மணிநேரம் காலதாமதமாக பிறபகல் 2:45 மணியளவில் கரைவந்துள்ளார்.
அவரை வீட்டிற்கு சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் விசாரணை செய்துவிட்டு சென்றுள்ள நிலையில் மீண்டும் நேற்று காலை 11:00 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு என கூறி குறித்த மீனவன் அழைக்கப்பட்டு வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கை கால்கள் கட்டப்பட்டு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலிற்க்கு கட்டைக்காடு முள்ளியானை சேர்ந்த 34 வயதுடைய ஞானப்பிரகாசம் ராஜ்குமார் எனும் 3 பிள்ளைகளின் தந்தையே உள்ளாகியுள்ள நிலையில் தற்போது கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.