இன்று மாலை, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்...
இன்று மாலை, யாழ்ப்பாணம் தபால் நிலையத்திற்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான வாகனம் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இனந்தெரியாத நபர் ஒருவர் அவ்வழியால் வந்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனால் வாகனத்தின் முக்பக்க கண்ணாடி பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழ். பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.