இரண்டாம் இணைப்பு அம்பாறை − திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்து...
இரண்டாம் இணைப்பு
அம்பாறை − திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினாலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்
முதலாம் இணைப்பு
அம்பாறை − திருகோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், அம்பாறை – திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அறிய முடிகின்றது.