இனி வரும் காலங்களில் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அஜித் அறிக்கை ஒன்றை வெள...
இனி வரும் காலங்களில் தன்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதானது :−
“பெரு மரியாதைக்குறிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,
இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் அல்லது AK என்றோ குறிப்பிட்டால் போதுமானது.
என்னை தல என்றோ அல்லது வேறு ஏதாவது பட்டப் பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள வெற்றி, மன அமைதி, மன நிறைவு, உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன்” என அஜித் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ் சந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.