இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் பயணிப...
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா காரணமாக தாயகம் பயணிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட 56 இந்திய மீனவர்களில் 43 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதனால் இந்தியா செல்வதுல் தாமதம் ஏற்பட்டுள்ளது.
2021ஆம. ஆண்டு டிசம்பர் மாதம்19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 56 மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விமானம் மூலம் அனுப்பி வைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விமானச் சிட்டை பெறுவதற்காக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டமை மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொரோனா காலத்து 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்ற பின்பே தமிழ்நாட்டிற்கு பயணிக்க முடுயும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.