யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொங்கல் விற்பனை இன்று முதல் மிக அமோகமாக இடம்பெறுகின்றது. தமிழர்களின் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு நாட்டின் பொர...
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பொங்கல் விற்பனை இன்று முதல் மிக அமோகமாக இடம்பெறுகின்றது.
தமிழர்களின் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் புதுப்பானை உட்பட அனைத்து பொருள் விற்பனையும் அமோகமாகவே இடம்பெறுகின்றன.
தைத் திருநாள் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளபோதும் குடாநாட்டின் அனைத்து வர்த்தக நகரங்களிலும் பொங்கல் உபகரணங்கள் அதிகளவில் இறக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இடம்பெறும் பொங்கல் விற்பனை காரணமாக 13 ஆம் திகதி பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலமையும் காணப்படலாம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.