புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக பனமரக் கற்றிகளை எற்றிவந்த பார ஊர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புங்...
புங்குடுதீவிலிருந்து சட்டவிரோதமாக பனமரக் கற்றிகளை எற்றிவந்த பார ஊர்தியொன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் நேற்றைய தினம் கைப்பற்றப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளிப் பிள்ளையார் ஆலயத்திற்கருகாமையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பல மாதங்களாக் கண்டியை சேர்ந்து ஒருவர் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த அரசியல் செல்வாக்கு கொண்ட இருவரது உதவியுடன் இந்த சட்டவிரோத செயற்பாட்டை மேற்கொள்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிசாருக்கும் துறைசார் தரப்பினருக்கும் தகவல் தெரிவித்தும் அத்தரப்பினரால் குறித்த தரப்பினருக்கு எதிராக எதுவித சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்படாதிருந்த நிலையில் விடையம் யாழ்ப்பாணப் பொலிஸ் உயரதிகாரியின் தலையீட்டை அடுத்து பனைமரக் குற்றிகளை ஏற்றிய பாரவூர்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.