தேசிய ரீதியில் சித்திரை மாதம் முதல் பாடசாலை நேரம் ஒரு மணி நேரத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண...
தேசிய ரீதியில் சித்திரை மாதம் முதல் பாடசாலை நேரம் ஒரு மணி நேரத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டு எதிர் வரும் 18-04-2022 முதல் ஆரம்பிக்கவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கும் புதிய ஆண்டுக்கான பாடசாலை நாட்கள் 139 நாள்கள் மட்டுமே உள்ளமையினால் மாணவர்களிற்கான பாடவிதானங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலமை உள்ளது.
இதனால் பாடசாலை நாள்களை அதிகரிக்க முன் வைக்கப்பட்ட யோசணையில் பல நெருக்கடி நிலமை சுட்டிக்காட்டப்பட்டது. இதற்கமைய 139 நாட்களும் பாடசாலைய ஒரு மணி நேரம் அதிகரிப்பதற்கு ஆராயப்பட்டு அதற்கமைய பாடசாலை இடம்பெறும் 139 நாள்களும் மேலதிகமாக ஒரு மணி நேரம் பாடசாலை நடாத்தினால் 26 நாள்களிற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தீர்மானித்து பாடசாலைகளை ஒரு மணி நேரம் அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் ஏப்பிரல் 18 முதல் பாடசாலைகள் தரம் 01 முதல் உயர் தரம் வரை சகல வகுப்புக்களும் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்படவுள்ளது.