வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தாய் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்...
வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராகப் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தாய் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 5 மாணவர்களுக்கு கற்பிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை யுடன் ஓட்டம் எடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் குறித்த குடும்பப் பெண் தனது பிள்ளைக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக பிரத்தியோகமாக வீட்டில் வந்து கற்பிப்பதற்கு யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவரை அழைத்துள்ளார்.
அவரும் சம்மதித்து தொடர்ச்சியாக வீட்டில் வந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்.
இவ்வாறு பிள்ளைக்கு வகுப்பு எடுப்பதற்காக வருகை தந்த இரு பிள்ளைகளின் தந்தையான ஆண் ஆசிரியர் தான் கல்வி கற்பிக்க வந்த பிள்ளையின் தாயை அழைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.