ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் முன்வைத்துள்ள கோரிக்கை!

ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் முன்வைத்துள்ள கோரிக்கை!

ஜனாதிபதியுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர் சி.அ....

ஜனாதிபதியுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இணைப்பாளர்
சி.அ.ஜோதிலிங்கம் 14 கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவர் தெரிவித்தார்.



 அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற இருக்கின்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கலந்துரையாடலும் கூட்டமைப்புக்குள்ளோ வெளியிலோ நடாத்தாமல் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. இது தொடர்பாக பங்காளிக்கட்சிகளுடனும் எதுவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. தமிழரசுக் கட்சிக்குள்ளும் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை.
கூட்டமைப்புக்கு வெளியே கல்வியாளர்கள், சமூக முக்கியஸ்தர்களுடனும் எந்தவித உரையாடலும் இடம்பெறவில்லை. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்படவில்லை.


பங்காளிகாளிக் கட்சியான ரெலோ பேச்சுவார்த்தையை நிராகரிக்கும்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை கேட்டிருக்கின்றது. அதேவேளை கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஜனாதிபதியின் பொறிக்குள் சிக்க வேண்டாம் என சம்பந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளது. ஆனாலும் சம்பந்தன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வது என்பதில் உறுதியாக உள்ளார்.
ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல. இது வரலாற்று ரீதியாக திட்டமிட்ட ஒடுக்குமுறைகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வரும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பு பற்றிய பிரச்சினை. இதில் சம்பந்தன் மட்டும் தீர்மானங்களை எடுத்து செயற்பட முடியாது.


தற்போதைய கோத்தபாய அரசாங்கம் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலத்த நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபட முடியாது. சர்வதேச சமூகம் நாட்டின் ஸ்திரத் தன்மையை உடனடியாகப் பேணுமாறு கேட்டிருக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் நாட்டின் ஸ்திரத் தன்மையை ஒருபோதும் பேண முடியாது. கோத்தபாய அரசாங்கம் வலிமையான கொழுக்கிக்குள் மாட்டுப்பட்டுள்ளது.
 இந்தக் கொழுக்கி தமிழ் மக்களுக்கு சாதகமானது. இதனை கவனமாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
இலங்கை அரசுடனான தமிழ்த் தரப்பின் பேச்சவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் ஒருபோதும் வெற்றிகளைத் தரவில்லை. இலங்கை அரசு தமிழ் மக்களை இது விடயத்தில் ஏமாற்றியதே வரலாறு. எனவே அனைத்து பேச்சுவார்த்தைகளும் சர்வதேச மத்தியஸ்தத்துடனேயே இடம்பெற வேண்டும்.
தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு நீதிகோரும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, இயல்புநிலையைக் கொண்டுவருதல் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் உரிய வகையில் பேச்சுவார்த்தையில் உள்வாங்கப்படல் வேண்டும்.

எனவே தமிழ் மக்களின் அரசியல் பொருளாதார, கலாசார விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை உருவாக்கி மக்கள் மத்தியில் கொண்டுசெல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சமூக விஞ்ஞான ஆய்வுமையத்தினராகிய நாம் பின்வரும் கோரிக்கைகளை தமிழத்தேசியக் கூட்டமைப்பினரிடம் முன் வைக்கிறோம்.
1.நாளை இடம்பெறும் பேச்சு வார்த்தையை நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதற்கு மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படி எதிர்காலத்தில் சர்வதேச மத்தியஸ்தத்தினுடனேயே பேச்சுவார்த்தைக்கு செல்ல வேண்டும்.

2. சர்வதேச மத்தியஸ்தர்கள் யார் என்பது தொடர்பாக நாளை பேச்சுவார்த்தையில் ஒரு இணக்கத்திற்கு வரலாம்.
3. சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சவார்த்தைக்கு முன்னர் பேச்சுவார்த்தை தொடர்பான நல்லெண்ணத்தை அரசு வெளிக்காட்ட வேண்டும். அதன் பின்னரே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்பதை வலியுறுத்த வேண்டும்.

4.அரசயல் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
5.சர்வதேச சமூகம் சிபார்சு செய்தபடி நிலைமாறுகால நீதிக் கோட்பாட்டிற்கிணங்க காணாமல் போனோரின் விவகாரம் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள நிகழாமையை உறுதிப்படுத்துதல் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
6.காணாமல் போனோருக்கான இழப்பீடு தீர்மானிக்கும் வரை பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக மாதாந்த இழப்பீடு தொகை வழங்கப்படல் வேண்டும். முன்னைய 6000ரூபா போதுமானதல்ல.

7. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும்.
8. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

9.தொல்லியல் தினைக்களம் வனபரிபாலன தினைக்களம், வனஜீவரராசிகள் தினைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
10. தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அரச செயலகங்களில் உயர் அதிகாரிகளாக சிங்களவர்களை நியமிப்பது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
11. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம் கிழக்குப் பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பவற்றில் எழுபது வீத மாணவர்கள் தமிழ் பேசும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
12. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உடனடியாக தீர்க்கப்படல் வேண்டும்
13. தமிழ்ப் பிரதேச கடற்பரப்பில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். குறிப்பாக மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
14. எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளின் போது அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கென துறைசார் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு உருவாக்கப்படல் வேண்டும். இக்குழுவின் ஆலோசனைப்படியே அரசியல் தலைமை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது- என்றார்

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3328,lanka,8619,medical,7,Medicial,39,sports,352,swiss,15,technology,79,Trending,4221,Videos,10,World,576,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் முன்வைத்துள்ள கோரிக்கை!
ஜனாதிபதியுடனான கூட்டமைப்பின் பேச்சுவார்த்தை தொடர்பில் சமூக விஞ்ஞான ஆய்வு மையம் முன்வைத்துள்ள கோரிக்கை!
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjyvmxIFYkBMw9viA0ceU6Jnf5Hgyn7BUmpH4vAMQ4TNKq3zHVpQIY9z6XjIACFAuFMXVXJqnmME1Hr1m6fH4Pgzrq0f3cGVnJxst1akYnJny58HFL94mEweUx3aPYyhlyQvaRdG2PUF0Tuminm0SrQYcNwq8Crzg9w8KpAOeyYgUIJcusrSwtpC9OI=w640-h480
https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjyvmxIFYkBMw9viA0ceU6Jnf5Hgyn7BUmpH4vAMQ4TNKq3zHVpQIY9z6XjIACFAuFMXVXJqnmME1Hr1m6fH4Pgzrq0f3cGVnJxst1akYnJny58HFL94mEweUx3aPYyhlyQvaRdG2PUF0Tuminm0SrQYcNwq8Crzg9w8KpAOeyYgUIJcusrSwtpC9OI=s72-w640-c-h480
Yarl Express
https://www.yarlexpress.com/2022/03/blog-post_82.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2022/03/blog-post_82.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content