டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் இரண்டு கப்பல்களில் நிலக்கரி தேங்கியுள்ளதாகவும், அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள...
டொலர் தட்டுப்பாடு காரணமாக துறைமுகத்தில் இரண்டு கப்பல்களில் நிலக்கரி தேங்கியுள்ளதாகவும், அவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளப்படாவிட்டால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
டொலர் வழங்கி விடுவிக்காமை காரணமாக கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கப்பல்களில் 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி தேங்கிக் கிடைப்பதாகவும் கப்பலில் இருந்து நிலக்கரி விடுவிக்காமை காரணமாக அந்தக் கப்பல்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் எச்சரிக்கை நிலை உருவாகியுள்ளதாகவும் மின்சார சபை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இம்மாதம் 12ம் திகதி மேற்படி இரண்டு கப்பல்களும் துறைமுகத்தை வந்து சேர்ந்துள்ள நிலையில் அதற்காக 34 மில்லியன் டொலர்கள் செலுத்தப் பட வேண்டியுள்ளதாகவும் டொலர் வழங்கப்படாமை காரணமாக நேற்றுடன் 6 நாட்களாக இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விரைவாக இந்த நிலக்கரி விடுவிக்கப்படாவிட்டால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் பாதிப்படையலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.