கோட்டாபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பி...
கோட்டாபாய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமது முழுமையான ஆதரவினை வழங்க தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், கோட்டாபாய அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் எனவும அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.