அமைதி போராட்டத்தின் காரணமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 24 மணிநேர இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு கொழும்பு ந...
அமைதி போராட்டத்தின் காரணமாக சட்டத்தின் முன் நிறுத்தப்படும் அனைத்து தரப்பு மக்களுக்கும் 24 மணிநேர இலவச சட்ட உதவிகளை வழங்குவதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்குகள் நிறைவடையும் வரை நீதிமன்றத்தில் இலவசமாக முன்னிலையாவதற்கும் குறித்த சங்கம் தீர்மானித்துள்ளது.
அமைதி போராட்டங்களில் ஈடுபட்டதன் காரணமாக சட்ட விரோதமான முறையில் கைது செய்யப்பட்டவர்கள் 071 831 6948 மற்றும் 070 730 2025 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பிகொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.