ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து ...
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேகாலை நீதவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு காவல்துறைமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.