நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று (2...
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கண்டனம் தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்று (21) ஓட்டமாவடி பிரதேசத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்கம், ஆட்டோ சாரதிகள் சங்கம், உழவு இயந்திர சாரதிகள் சங்கம், மீனவர் சங்கம், வர்த்தக சங்கம் என்பன இணைந்து ஓட்டமாவடி வான் சாரதிகள் சங்க தலைவர் கே.பி.எம்.சாஜகான் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.