பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய தந்தையை இழந்த பெண்பிள்ளை ஒருவருக்கு திருமணம் செயவதற்காக சுமார் இரண்டு லட்சம் ரூபா நிதி அளித்து தொண்டைம...
பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய தந்தையை இழந்த பெண்பிள்ளை ஒருவருக்கு திருமணம் செயவதற்காக சுமார் இரண்டு லட்சம் ரூபா நிதி அளித்து தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் உதவியுள்ளது.
தெல்லிப்பளை பெரியபுலம் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தந்தையை இழந்து தாயாரோடு மிகவும் வறிய நிலையில் வாழும் பெண் ஒருவருக்கே அவரின் திருமணத்திற்காக குறித்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரமத்தினால் வெளியிடப்படும் ஞானச்சுடர் இதழின் தைமாத இதழுக்கான பங்களிப்பை ஆற்றும் மக்கள் வங்கி சமூகத்தினரின் பங்குபற்றுதலோடு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் வைத்து குறித்த உதவி வழங்கப்பட்டது.
இதன்போது மிருசுவில் வடக்கு பத்திரகாளியம்மன் ஆலய புனருத்தாரண வேலைகளுகளுக்கும் சந்நிதியான் ஆச்சிரமத்தினால் ஐம்பதுனாயிரம் ரூபா நிதி ஆலய நிர்வாகத்தினரிடம் வழங்கி வைக்கப்பட்டது.