யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறை தலைவர் நல்லதம்பி பேரின்பநாதன் அவர்களின் 45வது நாள் நினைவு தினம் இடம்பெறவுள்ளதுடன் பேராசிரியர் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் துறை தலைவர் நல்லதம்பி பேரின்பநாதன் அவர்களின் 45வது நாள் நினைவு தினம் இடம்பெறவுள்ளதுடன் பேராசிரியர் செ.சந்திரசேகரம் எழுதிய "இலங்கையின் பொருளாதார நெருக்கடி : 2022 வெளிப்பாடுகள் மூலங்கள் மற்றும் மீட்சிகள்" எனும் நூலும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை(9) மதியம் 2 மணிக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறீசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் எஸ்.மோகனதாஸ்,
வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் த.மங்களேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் ஏனைய பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நினைவுப் பேருரைகளை ஆற்றவுள்ளனர்.