இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் அனுப்பப்படும் எனவும் நாளை முதல் அதனை பொதுமக்கள்...
இன்று (23) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் அனுப்பப்படும் எனவும் நாளை முதல் அதனை பொதுமக்கள் பெறலாமென எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
95 ஒக்டேன் பெற்றோலை பயன்படுத்துபவர்கள் 92 ஒக்டேன் பெற்றோலை பெற வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
95 ஒக்டேன் பெற்றோல் நாளை முதல் கிடைக்கும் எனவும் அதன் பின்னர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பாவனையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது எரிபொருள், குறிப்பாக பெற்றோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.தேவையான எரிபொருளை பெறுவதற்காக பொதுமக்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.