நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும...
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமை மற்றும் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம், பாதுகாப்புக்கு மத்தியில், எரிபொருளை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கொள்கலன் தாங்கி ஊர்திகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சென்றபோதும், எரிபொருள் விநியோகம் இடம்பெறவில்லையென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.