பளையில் இரு வாகனங்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதி விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் தொடர்பில் தெ...
பளையில் இரு வாகனங்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஆறு மணி அளவில் ஒன்றுடன் ஒன்று மோதியதி விபத்துக்குள்ளானது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது A9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் அதன் பின்னால் வந்த வான் தனியார் பேருந்துடன் மோதியதில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வான் சாரதி படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.