இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் சுமார் இரண்டு பில்லியனுக்கும் அதிக பெறுமதியான மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. 9,0...
இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் சுமார் இரண்டு பில்லியனுக்கும் அதிக பெறுமதியான மனிதாபிமான உதவிப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
9,000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா மற்றும் 25 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான மருந்து பொருட்கள் அடங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்தது.
இந்த உதவிப் பொருட்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் கையளித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த உதவிப்பொருட்களை சென்னை துறைமுகத்திலிருந்து கொடியசைத்து அனுப்பி வைத்திருந்தார்.
இந்த உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு அரசாங்கத்தால் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.