பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்குமாறு, பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணி...
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிகமாக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்குமாறு, பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு எம்.பி.க்கும் கூடுதலாக 4 அதிகாரிகள் நியமிக்கப்பட்ட்டு, 6 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பிற்காக இணைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக தலா இரண்டு T-56 ரக துப்பாக்கிகளை வழங்குமாறும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.