அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்...
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் இன்று பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அரச ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது.
காலி முகத்திடல் நோக்கி விரைந்துள்ள அரச ஆதரவாளர்கள் கலக செயல்களில் ஈடுபட்டுவருவதுடன், காலி முகத்திடலில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களை தகர்த்தெறிந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் கலகக்காரர்களை அடக்கும் முகமாக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கலக நடவடிக்கைகளின் காரணமாக காயமடைந்துள்ள 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.