எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தாங்கிகளை திறப்பதில் தலையிடுவதை தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளத...
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தாங்கிகளை திறப்பதில் தலையிடுவதை தவிர்க்குமாறு பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸாருக்கும் அறிவித்துள்ளது.
எரிபொருள் தாங்கிகளை திறக்குமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள பொலிஸாரிடம் கோருவதை தவிர்க்குமாறும் பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இத்தகைய முயற்சிகள் ஆபத்தானவை என்றும் பாதுகாப்புக் கவலைகளை எழுப்புவதாகவும் ஒரு அறிக்கை கூறியுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் பொதுமக்கள், எரிபொருள் முடிந்து விட்டதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறியதும் கொந்தளிக்கின்றனர். அத்துடன், எரிபொருள் கொள்கலன்களை திறந்து காட்டுமாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையடுத்து மக்களை அமைதிப்படுத்த பொலிசார், கொள்கலன்களை திறந்து, எரிபொருள் இருக்கிறதா இல்லையா என்பதை பொதுமக்களிற்கு அறிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய இவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில், எரிபொருள் பதுக்கி வைத்திருந்து, கையும் மெய்யுமாக சிக்கியும் வருகிறது.
எனினும், இவ்வாறு எரிபொருள் களஞ்சிய கதவுகளை திறந்து பொதுமக்களிற்கு காட்டுவதை தவிர்க்குமாறு பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொதுமக்களை ஒழுங்குபடத்துவது மாத்திரமே பொலிசாரின் கடமையென அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.