டீசலின் விலை அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ள...
டீசலின் விலை அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடியால் தனியார் பஸ் உரிமையாளர்களும் நுகர்வோரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிபொருள் விலையேற்றத்தை கருத்தில் கொண்டு வருடாந்தம் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எனவே பஸ் கட்டணத்தை 35 வீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
20,000 பேருந்துகளில் 1,000 தனியார் பேருந்துகளே இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை, தற்போதைய எரிபொருள் நெருக்கடியானது தனியார் பஸ் சேவைகளை இயக்குவதற்கு தடையாக மாறியுள்ளதாக இலங்கை தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களும் பஸ்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளதால், தனியார் பஸ் சேவைகளுக்கு இடையூறாக உள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பஸ் சேவைகளை தொடர்ந்து நடத்துவது சிரமமாக உள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
மொத்த தனியார் பேருந்துகளில் 10% மாத்திரமே இன்று சேவையில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிபொருள் நெருக்கடி காரணமாக பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.