மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், வேரஹெர சாரதி அ...
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வேரஹெர சாரதி அனுமதிப்பத்திர அலுவலகம் மற்றும் கம்பஹா மற்றும் அநுராதபுரம் மாவட்ட அலுவலகங்கள் வியாழக்கிழமைகளில் திறந்திருக்கும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்கான இணையவழி முன்பதிவு செய்தவர்களுக்காக மட்டும் இந்த அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.