அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளாக காவ...
அத்துருகிரிய பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளாக காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது காவல்துறையினர் செயற்பட்ட முறை குறித்து விசாரிப்பதாக எமது செய்திச் சேவையிடம் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட 9 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த 6 காவல்துறையினர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டிருந்த வேளையில் சிலர் உள்ளே நுழைய முற்பட்ட நிலையில், அவர்களை தடுப்பதற்கு காவல்துறையினர் முயற்சித்தபோது மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
எவரேனும் ஒரு காவல்துறை அதிகாரி, தமது அதிகாரத்திற்கு அப்பால் செயற்படுவாராயின் அல்லது தமது சீருடையை ஏதேனும் ஒரு தமது தனிப்பட்ட தேவைக்கு அவசியமற்ற முறையில் பயன்படுத்துவாராயின் அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒழுக்காற்று ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
அதேநேரம், பொதுமக்கள் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.