நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட...
நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை டுபாயிலிருந்து விமானம் மூலம் நாட்டை வந்த குறித்த நபரிடமிருந்து 16 தங்கப் பாளங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி 4 கோடியே 72 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.