இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் முதல் தொகுதி யூரியா உரம், ஓமான் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்றும் பணிகள் ...
இந்திய கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் முதல் தொகுதி யூரியா உரம், ஓமான் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில் ஏற்றும் பணிகள் நேற்றிரவுடன் நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில், அடுத்த சில தினங்களில் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தில் 40,000 மெட்ரிக் டன் உரம் கப்பலில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய உர இருப்பை இன்னும் சில வாரங்களில் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாயப் பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.