ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை நேற்று நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக கூறிய போதிலும், இறுதி வரை கடிதத்தை கையளிக்கவில்லை ...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது இராஜினாமா கடிதத்தை நேற்று நள்ளிரவுக்கு முன்னர் கையளிப்பதாக கூறிய போதிலும், இறுதி வரை கடிதத்தை கையளிக்கவில்லை என அறிய முடிகின்றது.
இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு தப்பி சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூர் சென்று தமது பாதுகாப்பை உறுதி செய்ததன் பின்னர், ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாலைதீவு – மாலே பகுதியிலுள்ள விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ, மாலைதீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி இன்று பயணிக்கவுள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.