முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மிரிஹான பகுதியிலுள்ள பிரத்தியேக வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஸ மற்ற...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் மிரிஹான பகுதியிலுள்ள பிரத்தியேக வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில், அவர்கள் எதிர்வரும் 24 ம் திகதி நாட்டிற்கு வருகை தர திட்டமிட்டிருந்தார்கள்.
எனினும், தற்போது அந்த திட்டம் எதிர் வரும் செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், கோட்டாபய ராஜபக்ஸவிற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலை அடுத்தே, கோட்டாபய ராஜபக்ஸ இந்த தீர்மானத்தை எட்டியுள்ளார்.