யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்...
யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குராரப்பனம் செய்து வைக்கப்பட்டது.
அண்மையில் நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல்களை தவிர்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டுமுகமாக குறித்த செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்டமாக இன்றைய தினம் யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்களுக்கு குறித்த செயற்திட்டம் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இவ் செயற்றிட்டமானது வடக்கு,கிழக்கு,மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கபடவுள்ளது.
யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பயிற்சி பெற்ற மாணவ ஆளணியினரால் இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.