2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த உரையை...
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பாராளுமன்றில் ஆரம்பமாகியுள்ளது.
எமது நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, எதிர்ப்புகள், போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அப்பாற்பட்ட புதிய அணுகுமுறையின் மூலம் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம்
ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் கீழ் புதிய மருத்துவ பீடத்தை ஆரம்பிப்பதற்கு 200 மில்லியன் ரூபாய்
வைத்தியர்களுக்கான முதுகலைப் பட்டப்படிப்பு நிலையங்களை பேராதனை, ருஹுணு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களில் ஆரம்பிக்க 60 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வரலாற்று கற்கைகளுக்கான புதிய நிறுவகத்தை நிறுவுவதற்கு 50 மில்லியன் ஒதுக்கீடு.
அரச வருவாய் அதிகார சபையை நியமிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்படவுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான சுகாதார காப்பீட்டுத் திட்டம் தனியார் துறை ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்.
அரச துறையிலுள்ள சீர்திருத்தங்களை ஆராய குழு அமைக்கப்படும்
கடவுச்சீட்டு மற்றும், விசா கட்டணங்கள் உயர்த்தப்படும்.
புதிய பொருளாதார திட்டத்தில் சிறப்பு கவனம் – சுற்றுச்சூழல் நட்பு பச்சை மற்றும் நீல பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம்.
அதிக செல்வாக்கு மற்றும் மதிப்புள்ள நபர்களைக் கண்டறிந்து அவர்களின் வரி பங்களிப்புகளை ஊக்குவிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்
அரச துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் படும் சிரமங்களை கருத்திற்கொண்டு, அரசு சேவை சீர்திருத்தங்களுடன், 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தத் துறைகளுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
பொருளாதார மாற்றத்திற்கு தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டமூலங்கள் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரசுத் துறை நிறுவனங்களைக் கவனிக்க நிதி அமைச்சகம் ஒரு சிறப்புப் பிரிவை நிறுவியது.இதன்படி, ஸ்ரீலங்கா டெலிகொம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஹில்டன் கொழும்பு, வாட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டல் மற்றும் ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சீர்திருத்தப்பட உள்ளன
இலங்கையில் நுண்-நிதி நடவடிக்கைகளை ஆராய்வதற்காக ஒரு ஒழுங்குமுறை அமைப்பு நிறுவப்படவுள்ளது.
ரத்தினக்கல் வர்த்தக மையம் அமைக்கப்படும்.
சீர்திருத்தங்கள் மற்றும் நவீனமயமாக்கலின் அடிப்படையில் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7%-8% என்ற உயர் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தொழில்முனைவை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு.
குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை ஆராய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கஞ்சாவை ஏற்றுமதி பயிராக பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும்.
அரச மருத்துவமனைகளில் கட்டண வார்டு முறையை மீண்டும் அமல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது
கைதிகளுக்கான சுகாதார வசதிகளை மேம்படுத்த நூறு மில்லியன்
வழிபாட்டு தலங்களுக்கு சூரிய சக்தி மின்னுற்பத்தி உபகரணங்களை வழங்க ஏற்பாடு
குடிநீர் பாட்டில்களுக்கு பாதுகாப்பு ஸ்டிக்கர் கட்டாயமாக்கப்பட வேண்டும்
பட்ஜெட் முன்மொழிவுகளை மறுபரிசீலனை செய்வதற்கான பணிக்குழு அமைக்கப்பட உள்ளது.
இளைஞர்களை இலக்காகக் கொண்டு வெளிநாட்டு தொழில் பயிற்சிக்கு 50 மில்லியன் ஒதுக்கீடு.
பொலன்னறுவை, குருநாகல் மற்றும் பதுளை வைத்தியசாலைகள் போதனா வைத்தியசாலைகளாக தரமுயர்த்தல்
மதுபான உற்பத்திகளின் தரத்தை பரிசோதிக்க கலால் ஆய்வக வசதியை ஏற்படுத்த 100 மில்லியன் ஒதுக்கீடு
காலநிலை மாற்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளுக்காக 500 மில்லியன் செலவில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவுதல்.