கொரோனா காலத்திலும் பார்க்க குறைவாகவே வீட்டுத்தோட்ட செய்யை இடம்பெற்று வருகிறது என விவசாய போதனாசிரியர் ம. கிரிதரன் தெரிவித்தார். கரித்தாஸ் கி...
கொரோனா காலத்திலும் பார்க்க குறைவாகவே வீட்டுத்தோட்ட செய்யை இடம்பெற்று வருகிறது என விவசாய போதனாசிரியர் ம. கிரிதரன் தெரிவித்தார்.
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் உணவு பாதுகாப்பு செயல் திட்டத்திற்கு உலக உணவு தினத்தை முன்னிட்டு உள்ளுர் உற்பதிகளின் கண்காட்சியும் விற்பனைநும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பொது மண்டபத்தில் நடைபெற்றது குறித்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் உரையாற்றுகையில்
உணவு உற்பத்தியானது அனைத்து பிரதேசங்களும் செய்யக்கூடியதாக இருக்கும் போது அதில் முழுமையான அக்கறை காட்டாது தேவையற்ற ரீதியில் பொழுதை கழிக்கின்ற நிலை காணப்படுகிறது தகுறிப்பாக இன்றைய பொருளாதார நெருக்கடியான நேரத்தில் ஒருவர் மீது ஒருவர் குறைகளை கூறாது அதிலிருந்து விடுதலையடைய ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும்
வீட்டுத்தோட்டம் என்பது அனைவருக்கும் கைகொடுக்கின்ற ஒரு தொழில் முயற்சியாக உள்ளது ஆனால் அதிகளவானோர் இதில் ஆர்வம் காட்டவில்லை கொரோனா காலத்தில் அனைத்து வீடுகளிலும் வீட்டுத் தோட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கிவந்துள்ள நிலையில் இன்று அந்த நிலை இல்லாது காணப்படுகிறது தற்போதைய காலத்தில் 50 வீதத்திற்கு குறைவாகவே வீட்டு தோட்டம் செய்கை செய்யப்பட்டு வருகிறது வீட்டு தோட்டத்தில் பொழுதை கழிக்காது வேறு ஒரு சூழலில் பொழுதை செய்துவருகிறார்கள் இது ஆரோக்கியமான சூழல் இல்லை எனவேமுடியுமானவரை ஆரோக்கியமான விட்டு தோட்டத்தை செய்கை செய்ய வேண்டும் யாழ்பாணத்தில் அரியாலை பூம்புகார் பிரதேசம் நில சூழல் வீட்டுதோட்டத்திற்கு சவாலாக காணப்பட்டாலும் மழை காலத்தில் வீட்டு தோட்டம் கைகொடுக்கி தொழில் முயற்சியாக உள்ளது எனவே அனைவரும் இம் முயற்சி தொடர்பில் அக்கறை கொண்டு செயற்படவேண்டும் என்றார்.