கால்பந்து என்பது நட்பு, தோழமை மற்றும் திபெத்தியர்களின் கொண்டாட்டமாகும். 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள ...
கால்பந்து என்பது நட்பு, தோழமை மற்றும் திபெத்தியர்களின் கொண்டாட்டமாகும். 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விளையாட்டுக்கும் திபெத்தியர்களுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவு கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.
கால்பந்து மீதான திபெத்திய அன்பின் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காணலாம். திபெத்தில் கால்பந்தை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேயர்கள் 1913 இல் லாசாவில் ஒரு இராணுவப் பயிற்சி முகாமை கட்டினார்கள். கலாச்சாரப் புரட்சி மற்றும் சீனாவின் திபெத்தின் மீதான படையெடுப்பு ஆகியவை விளையாட்டின் மீது பேரழிவு விளைவை ஏற்படுத்தியது.
உலகின் மேற்கூரையான தீபெத் சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டது. 1959 இல், தலாய் லாமா, பல திபெத்தியர்களுடன் சேர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறிய திபெத்தியர்கள் விளையாட்டின் மீதான தங்கள் அன்பை அவர்களுடன் கொண்டு வந்தனர். இந்த ஆண்டுகளில், நாடுகடத்தப்பட்ட தலைமுறைகள் வழியாக திபெத்திய கால்பந்து விளையாட்டு வளர்ந்துள்ளது.
நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்களைக் கொண்ட திபெத் தேசிய கால்பந்து அணியை உருவாக்க உதவியவர் டேனிஷ் பத்திரிகையாளர் மைக்கேல் நைப்ராண்ட். விளையாட்டின் மீதான திபெத்திய அன்பாலும், சீனாவின் நிலத்தை இணைத்த வரலாறுகளாலும், அவர் ஒரு திபெத்திய தேசிய அணியை உருவாக்குவதை நோக்காக கொண்டு நாட்டின் கடந்த காலம் மற்றும் நிகழ்காலம் குறித்து விழிப்புணர்வை பரப்பினார்.
2001 ஜூன் 30 அன்று கோபன்ஹேகனில் சுமார் 5000 பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற கிரீன்லாந்து தேசிய கால்பந்து அணிக்கு எதிராக 'தடைசெய்யப்பட்ட அணி' தனது முதல் சர்வதேச விளையாட்டை விளையாடி வரலாற்றை உருவாக்கியது. நாடுகடத்தப்பட்ட திபெத்தியர்கள் தங்கள் தாயகத்திலிருந்து விலகி, சக திபெத்தியர்களுடன் தங்கள் அணிக்காக உற்சாகப்படுத்தினர்.
2002 ஆம் ஆண்டில் திபெத்திய தேசிய விளையாட்டு சங்கம் உருவானது. பின்னர் திபெத்திய சமூகம் மற்றும் சர்வதேச அளவில் கால்பந்து விளையாட்டை மேம்படுத்துதல், ஊக்குவித்தல் மற்றும் பிரபலப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தது.
2010 ஆம் ஆண்டில், தர்மசாலாவில் வசித்து வந்த அமெரிக்கரான காசி சில்டர்ஸ், ஒரு மகளிர் அணியை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தபோது, திபெத்திய பெண்களுக்கு வாய்ப்பளித்திலும் இளம் கால்பந்து வீரர்களின் தலைமுறையை ஊக்குவிப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
தலாய் லாமாவின் 14வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக திபெத்திய குடியிருப்புகளில் நட்பு கால்பந்து போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது பெரும் கூட்டத்தை கவர்ந்துள்ளது. புலம்பெயர்ந்த திபெத்தியர்களுக்கு, கால்பந்து என்பது அவர்கள் தங்கள் தேசத்தைக் கொண்டாடும் ஒரு வழியாகும். பிராந்திய திபெத்திய இளைஞர்கால் நடத்தப்பட்ட பழமையான திபெத்திய கூடைப்பந்து போட்டி - திபெத்தியர்களின் நினைவு, திபெத்துக்காக தங்கள் விலைமதிப்பற்ற உயிரை தியாகம் செய்த திபெத்திய தியாகிகள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் முயற்சியாக அமைந்தது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது மனித உரிமைச் சாதனைகளை வெள்ளையடிக்க விளையாட்டை ஒரு கருவியாகப் பயன்படுத்திய வரலாறும் உண்டு. பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் 2022 மிக சமீபத்திய உதாரணமாகும். 'இனப்படுகொலை விளையாட்டு' என பல நாடுகள் இராஜதந்திர புறக்கணிப்பை அறிவித்தன.
திபெத் மற்றும் சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் பெய்ஜிங் ஒலிம்பிக் 2008 கறைபட்டது. கால்பந்து உலகக் கோப்பை 2022 விரைவில் நெருங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள திபெத்தியர்களும் கால்பந்து திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். கால்பந்து என்பது திபெத்திய சமூகத்திற்கு ஒரு விளையாட்டை என்பதை விட அதற்கும் மேலானதாகும். இது அவர்களின் திருடப்பட்ட தேசம், அடையாளம் மற்றும் கனவுகள் பற்றி உலகத்துடன் உரையாட உதவும் என்பது திபெத்தியர்களின் நோக்கமாகும்.