கெபத்திகொல்லாவ பகுதியில் நேற்றிரவு (ஒக்.31) ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். 54 வாயதான பொலிஸ் சார்ஜன...
கெபத்திகொல்லாவ பகுதியில் நேற்றிரவு (ஒக்.31) ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.
54 வாயதான பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடார்பில் பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெபத்திகொல்லாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வாரியபொல பகுதியை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்,
காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்தே, இங்கு அமைதியின்மை நிலவி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சென்ற பொலிஸாருக்கும், பிரதேசவாசிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது பதற்றமாக மாறியது.
அவ்வேளையில், அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் கெபத்திகொல்லவை – பதவிய வீதியின் ரம்பகேபூவெவ பிரதேச வீதியை மறித்து போராட்டம் நடாத்தியிருந்தனர்.
அதன் பின்னர் குறித்த குழுவினர் பொலிஸ் அதிகாரிகளை நோக்கி கற்களினால் தாக்குதல் தடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் வானை நோக்கி நேற்றிரவு துப்பாக்கி பிரயோகம் நடத்தியிருந்தனர்.