அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் கிராந்தி இலவன்குடா பகுதியில் அண்மையில் வழங்கப்பட்ட 82 அட்டப்பந்தங்களும் உரையா திணைக்களங்களின் அனுமதியுடனே வழ...
அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவினால் கிராந்தி இலவன்குடா பகுதியில் அண்மையில் வழங்கப்பட்ட 82 அட்டப்பந்தங்களும் உரையா திணைக்களங்களின் அனுமதியுடனே வழங்கப்பட்டது என சிறிமுருகன் கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் மகேந்திரன் தெரிவித்தார்.
நேத்து திங்கட்கிழமை யா ஊடக அமைய அத்தை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் அமைச்சர் வழங்கிய அட்டப்பண்ணை பக்கச் சார்பானது என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடாக சந்திப்பில் அட்டப்பண்ணைக்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒருவர் கருத்து கூறியிருந்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்ட அட்டப்பண்ணைகள் உரிய வழிமுறைகளின் பிரகாரம் சங்கங்களின் அனுமதி பிரதேச செயலக அனுமதி மற்றும் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் அனுமதிகளைப்பெற்று அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக ஆட்ட பண்ணைகளை தருமாறு கூறியிருந்தோம் அனுமதி தராத நிலையில் நாங்களாக பண்ணைகளை அமைத்து பெறுபேறுகளை அதிகாரிகளுக்கு காட்டினோம்.
தற்போது பண்ணைகள் ஒழுங்குபடுத்தப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் சில பண்ணைகள் இடைவெளி போதாமையால் மாற்றி அமைக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகிறது.
அட்டைப் பண்ணைகளை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்த போது போராட்டம் நடத்தி அவர்களை தடுத்தார்கள்.
பிரச்சனை நீதிமன்றம் சென்ற நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் உரிய அளவீடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவு வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாது சிறகு வலை பாயும் இடங்களை உரிய முறையில் அளவீடு செய்து பகிர்ந்து அளிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை உரியவர்கள் அதற்கான விண்ணப்பங்களை வழங்காத நிலையே காணப்படுகிறது.
ஏனெனில் உரிய முறையில் சிறகு வலைக்கான அனுமதி வழங்கப்படுமாயின் ஒருவர் ஒன்று அல்லது இரண்டு பாடுகளையே வைத்திருக்க முடியும்.
ஆனால் அட்டப்பண்ணைகளை பிழை எனப் போராடுபவர்களில் சிலர் ஐந்துக்கும் மேற்பட்ட பாடுகளை வைத்துள்ளதன் காரணமாக விண்ணப்பங்களை வழங்காது காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அட்டப்பண்ணை பிழை எனக் கூறுபவர்கள் தாம் சிறகுவலை செய்வது சரியா என ஒரு கணம் திரும்பி பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் போராட்டம் என கூறி பழைய போராட்டம் படங்களை வழங்கி ஒவ்வொரு நாளும் போராட்டம் என காட்ட முனைகிறார்கள்.
ஆகவே பிரச்சனை தொடர்பில் நாங்கள் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்ற நிலையில் சரியான விடையங்களை பிழையென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத என அவர் மேலும் தெரிவித்தார்.